ரோட்டில் சென்ற நொடி திடீரென காணாமல் போன நபர்.. எந்த சிசிடிவியிலும் இல்லை - கடைசியில் கிடைத்த மர்ம தடயம்

x

திருப்பூர், இடுவம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜன் பொன்னி. ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான இவர், கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் ஏரோநேட்டிக்கல் பயிற்சியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த ஒன்றாம் தேதி பணிக்கு சென்ற ராஜன், இரவு வீடு திரும்ப வில்லை என கூறப்படுகிறது. விசாரணையில், சூசையபுரம் சுரங்க பாலம் வழியே ஒன்றாம் தேதி இரவு, ராஜன் பைக்கில் சென்றதை சிசிடிவி மூலம் போலீசார் கண்டுபிடித்தனர். அதன் பிறகு அவர் சிசிடிவி காட்சிகளில் பதிவாகாத நிலையில், தேடுதலை முடுக்கி விட்ட போலீசார், சூசையாபுரத்திலிருந்து ராயபுரம் செல்லும் வழியில் உள்ள சாக்கடை கால்வாயில்... ராஜனின் இரு சக்கர வாகனத்தை மீட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பவத்தன்று பெய்த கனமழையில் ராஜன் சாக்கடை கால்வாயில் அடித்து செல்லப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், சாக்கடை கால்வாயில் ராஜனை அதிகாரிகள் தொடர்ந்து தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்