``தாத்தா வந்தாரு... செல்போன் தூக்கி போனாரு..'' - அலேக்காக திருடிய முரட்டு நபர்... வைரல் வீடியோ

x

-திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் சதீஷ் என்பவர் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடைக்கு 50 வயது மதிக்கத்தக்க முதியவர் வந்து தனது செல்போனை சோதனை செய்ய கொடுத்துள்ளார். தொடர்ந்து சந்தேகம் கேட்பது போல நடித்து, அங்கிருந்த செல்போனை எடுத்து கொண்டு சந்தேகம் தீர்ந்தது போல அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றார். சிறிது நேரம் கழித்து, கடையில் பணியாற்றி வந்த நபர் தனது, செல்போன்‌ இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் முதியவர் செல்போனை திருடி சென்றது தெரியவந்தது. தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்