மனநலம் பாதித்தவரை ஏமாற்றி சொத்தை அபகரித்த சகோதரர் - கலங்க வைக்கும் கணவரின் வார்த்தை

x

திருப்பூர் மாவட்டம் ஆறாக்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் வேலுச்சாமி விஜயலட்சுமி தம்பதி.விஜயலட்சுமிக்குக் கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

இந்தநிலையில் மனமாற்றத்திற்காக விஜயலட்சுமியை அவரது சகோதரர் வேலுச்சாமி வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார் கணவர் வேலுச்சாமி. இதனைச் சாதமாகப் பயன்படுத்திக் கொண்ட சகோதரர் வேலுச்சாமி பூர்விக சொத்தில் விஜயலட்சுமிக்கு உள்ள பங்கை ஏமாற்றி கையெழுத்து வாங்கி தனது பெயருக்கு மாற்றியதாகக் கூறப்படுகிறது.விஜயலட்சுமியை ஏமாற்றி சொத்தை பறித்த விவகாரம் அவரது கணவருக்குத் தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார். மேலும் இது குறித்து மனைவியின் சகோதரரிடம் கேட்ட போது கொலை மிரட்டல் விடுத்து இருக்கிறார்.இதனைத் தொடர்ந்து விஜயலட்சுமியின் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் இந்த விவகாரத்தில் அதிமுக மாணிக்கபுரம் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் சண்முகசுந்தர் விஜயலட்சுமி குடும்பத்தை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து சண்முகசுந்தரத்திடம் கேட்ட போது தான் யாருக்கும் கொலை மிரட்டல் விடுக்கவில்லை எனத் தெரிவித்து இருக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்