பலாத்காரம் செய்ய பாய்ந்த வடக்கு நபர் - பெண்டு நிமித்திய திருப்பூர் மக்கள்

x

விளையாடிக் கொண்டிருந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடமுயன்ற வடமாநில இளைஞரை, பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். திருப்பூர் மாவட்டம், போயம்பாளையத்தில் உள்ள குருவாயூரப்பன் நகர் பகுதியில் எட்டு வயது சிறுமி ஒருவர் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வடமாநில இளைஞர் ஒருவர், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி கூச்சலிடத் தொடங்கினார். இதைப்பார்த்த அப்பகுதி பொது மக்கள், சிறுமியை மீட்டு, வடமாநில இளைஞர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசார், வடமாநில இளைஞரை பொது மக்களிடம் இருந்து மீட்டு, அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோரை புகாரிளிக்கும்படி போலீசார் அறிவுறுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்