திடீரென தள்ளி வைக்கப்பட்ட 25 குடும்பம்..போலீஸ் காலில் விழுந்து கதறிய நபர் - அதிர்ச்சி காட்சிகள்

x

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே திருவிழா பிரச்சனை காரணமாக கோயில் நிர்வாகி காவல் அதிகாரி காலில்

விழுந்து கதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. தாராபுரம் அருகே உள்ள பெரமியம் கிராமத்தில் உள்ள பஜனை கோயிலில் ராமர் படத்தை வைத்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர்

பல ஆண்டுகளாக வழிபாடு நடத்தி வந்தனர். இந்நிலையில் ஒரு தரப்பினர் 25 குடும்பங்களை ஊரை விட்டு தள்ளி வைத்து கோயில் lதிருவிழாவில் கலந்து கொள்ளக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இதுதரப்பினரும் வழக்கு தொடர்ந்த நிலையில் அனைவரும் ஒன்றிணைந்து பஜனை கோவில் திருவிழாவை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கு உடன்படாமல் ஒரு பிரிவினர் கோயில் திருவிழாவை கொண்டாடிய நிலையில் தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது இருதரப்பினரும் இணைந்து கோயில் விழாவை நடத்த நடவடிக்கை எடுக்க கோரி கோயில் நிர்வாகி அண்ணாதுரை என்பவர் காவல்துறை அதிகாரி காலில் விழுந்து கதறிதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்