வெடித்த வாக்குவாதம்.. விறுவிறுவென கிளம்பி சென்ற ஊராட்சி தலைவர்

x

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த மங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவருக்கும், துணைத் தலைவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் பேசிய துணைத் தலைவர் தாஹா நசீர், கிராம சபைக் கூட்டத்திற்கு தனக்கு முறையாக அழைப்பு விடுக்கவில்லை என்று கூறினார். பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுக்குமாறு ஊராட்சி செயலரிடம் கேட்டால், ஊராட்சி மன்றத் தலைவர் ஒப்புதல் கொடுத்தால்தான் பணிகள் நடக்கும் என பதில் அளிப்பதாக குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக, ஊராட்சி மன்றத் தலைவருக்கும், துணைத் தலைவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், துணைத் தலைவர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்