இறக்கும் முன் மாணவர்கள் உயிர் காத்து.. நேசித்த ஸ்டியரிங்கிலே உயிர்விட்ட டிரைவர்

x

ஸ்கூல் வேன் ஓட்டும்போதே மாரடைப்பு..இறக்கும் முன் மாணவர்கள் உயிர் காத்து.. நேசித்த ஸ்டியரிங்கிலே உயிர்விட்ட டிரைவர் - மனைவி கண்முன்னே பிரிந்த சோகம் பள்ளி வாகனம் ஓட்டும்போது மாரடைப்பு ஏற்பட்ட போதும் இறப்பதற்கு முன் பள்ளிக் குழந்தைகளை வேன் ஓட்டுநர் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த வெள்ளகோவில் கே.பி.சி நகரை சேர்ந்த 49 வயது சேமலையப்பன் அய்யனூர் அருகே உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்... அதே வேனில் அவரது மனைவி லலிதா உதவியாளராக உள்ளார்... இந்நிலையில் வேன் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது... இருந்தபோதும் வேனை சாலை ஓரம் ஒருவழியாக நிறுத்தி விட்டு ஸ்டியரிங்கிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்... மனைவியும், வேனில் இருந்த மாணவர்களும் கண்ணீர் விட்டு அழுதனர்... இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்