சிறுவனின் உயிரை பறித்த மின்கம்பம்.. தொட்டதும் அடுத்த நொடி பறிபோன உயிர் | Tiruppur | Thanthitv

x

திருப்பூர், அனுப்பர்பாளையம் ஜீவா வீதியைச் சேர்ந்த மணிகண்டன்- சாந்தி தம்பதியின் மகன் சுதீஷ். இவர், அங்குள்ள மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் நேற்றிரவு சுதீஷ் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது, அந்த பகுதி வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க நடப்பட்ட இரும்பு கம்பியை தொட்டுள்ளார். அதில் பாய்ந்திருந்த மின்சாரம் தாக்கியதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். பாதுகாப்பற்ற மின்கம்பங்களை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என உறவினர்கள் வலியுருத்த உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்