திருப்பூரை அதிர வைத்த வடமாநில கும்பல்... வெளியான பகீர் பிண்ணனி | Tiruppur | TN Police | Thanthi TV

x

அவிநாசி சுற்றுவட்டார பகுதிகளில் நகைகளுக்கு பாலிஷ் போடுவதாக கூறி ஏமாற்றி கொள்ளையடித்த வட மாநில கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்து வடுகபாளையம் பகுதியில் கணவனை இழந்து தனியாக வசித்து வருபவர் சிவகாமி. சம்பவத்தன்று இவருடைய வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் நகைகளுக்கு பாலிஷ் போட்டு தருவதாக கூறி உள்ளனர். அதற்கு சுடுதண்ணீர் எடுத்து வருமாறு சிவகாமியை திசை திருப்பிய அவர்கள், நகைகளை எடுத்துக்கொண்டு தப்பினர். இதுகுறித்த புகாரின்பேரில் அங்கு பதிவான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அவிநாசி தனிப்படை போலீசார் அந்த நபர்களை தேடி வந்தனர். இதேபோல சுற்றுவட்டார கிராமங்களிலும் கொள்ளை சம்பவங்கள் நடந்த நிலையில், வாகன சோதனையின்போது பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அஜய் குமார், புஜ்ஜி யாதவ் ஆகிய இருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், 5 சிறுவர்கள் உள்பட 15 பேர் இதற்காகவே பீகாரில் இருந்து இங்கு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த மீதமுள்ள 13 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 3 விலையுயர்ந்த பைக், ஆறு பவுன் தங்கச் சங்கிலியை பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்