பேச்சுலர் ரூமில் தண்ணீ யார் பிடிச்சி வைப்பது என்பதில் முற்றிய தகராறு..நெஞ்சில் குத்து பட்டு ஓடிய நண்பன் மரணம் - ஆட்டோவை பிடிக்கும் முன்னே பிரிந்த உயிர்

x

திருப்பூரில், பேச்சுலர் ரூமில் தண்ணீர் யார் பிடிப்பது என்ற தகராறில், டிரைவரை குத்தி கொலை செய்த நண்பன் கைது செய்யப்பட்டுள்ளார்.சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரும், காரைக்குடியை சேர்ந்த வசந்த் என்பவரும், திருப்பூர் திருநீலகண்டபுரம் பகுதியில் அறை எடுத்து தங்கியிருந்தனர். அவர்களுக்குள், அறையில் தண்ணீர் பிடித்து வைப்பது தொடர்பாக அவ்வபோது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், அறையில் இருந்து கீழே இறங்கி வந்த ஆனந்தராஜை, நெஞ்சு மற்றும் வயிறு பகுதியில் கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து வசந்த் தப்பியோடினார். படுகாயமடைந்த ஆனந்தராஜ், தனது ஆட்டோ நோக்கி சென்று கீழே விழுந்து உயிரிழந்தார். தகவலறிந்து சென்ற காவல்துறையினர், தப்பிச்சென்ற வசந்தை சிறிது தூரத்திலேயே சுற்றி வளைத்து கைது செய்தனர். பேச்சுலர் அறையில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட நண்பனே கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்