கோயிலை சூழ்ந்த காட்டாற்று வெள்ளம் - எச்சரிக்கை விடுத்த போலீசார்

x

கோயிலை சூழ்ந்த காட்டாற்று வெள்ளம் - எச்சரிக்கை விடுத்த போலீசார்

திருப்பூர் மாவட்டம் வஞ்சிப்பாளையம் அருகே உள்ள நல்லம்மண் கோயிலானது ஆற்றின் நடுவே தடுப்பணையில் அமைந்துள்ளது. கோவை மற்றும் திருப்பூர் பகுதியில் கனமழை பெய்து வரும் நிலையில், நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து, இங்குள்ள நல்லம்மன் கோயிலை சுற்றி நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில் கோயிலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அங்குள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியுள்ள நிலையில், போலீசார் தடுப்புகளை அமைத்து கண்காணித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்