சாதாரண நபரை போல் சென்று ஆய்வு செய்தகலெக்டர் தெரிந்ததும் நடுங்கி போன கடைக்காரர்

x

திருப்பத்தூர் அருகே மளிகை கடைக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் ஹான்ஸ், கூல்நிப் இருக்கா? என கேட்டு ஆய்வு செய்தார். வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உங்களை தேடி..... உங்கள் ஊரில்.... திட்டத்தின் கீழ் அங்கேயே இரவு தங்கி அரசு திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்குள்ள மளிகைகடைக்கு சாதாரண நபர் போல் சென்ற ஆட்சியர் கூல்நிப், ஹான்ஸ் இருக்கிறதா என கேட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, அரசு மருத்துவமனைக்கு வந்திருந்த நோயாளிகளிடம் நலம் விசாரித்த அவர், வயல்களுக்கு சென்று பார்வையிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்