இறங்கிய டீம்.. பதற்ற பரபரப்பில் திருப்பதி

x

திருப்பதி லட்டு பிரசாதத்தில் கலப்பட நெய் பயன்படுத்திய விவகாரத்தை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட குழு, இன்று முதல் முழுவீச்சில் விசாரணையை தொடங்கவுள்ளது.

திருப்பதி கோயிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்திய நெய்யில் கலப்படம் இருந்தது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விசாரிக்க ஐ.பி.எஸ். அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகளை உள்ளடக்கிய சிறப்பு விசாரணை குழுவினை ஆந்திர மாநில அரசு அமைத்தது. இந்த குழுவின் தலைவரான சர்வ சிரேஷ்ட திரிப்பாட்டி, திருப்பதி கோயிலுக்கு வந்து ஏழுமலையானை தரிசித்தார். பின்னர், லட்டு மற்றும் பிரசாதங்கள் தயாரிக்கும் பகுதிகளை பார்வையிட்டார். இந்த குழுவானது இன்று முதல் முழு வீச்சில் விசாரணையை மேற்கொள்ளும் என கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்