பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த மலையப்பசாமி.. திருப்பதியே அதிர எழுந்த கோஷம்..

x

திருப்பதி திருமலையில், பிரம்மோற்சவத்தின் முதல் நாளான நேற்று, ஏழுமலையானின் பெரியசேஷ வாகன புறப்பாடு கோலாகலமாக நடைபெற்றது.

ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் முதல் நாளான நேற்று, திருமலையில், ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சாமி, பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளினார்.

முன்னதாக, கோயிலில் இருந்து உபய நாச்சியார்கள் சமேதராக புறப்பட்ட மலையப்ப சுவாமி வாகனமண்டபத்தை அடைந்தார். அங்கு ஏழு தலைகள் கொண்ட பெரியசேஷ வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர்களுக்கு சமர்ப்பணம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களின் பக்தி கோஷங்களுக்கு இடையே மாட வீதிகளில் ஏழுமலையானின் பெரியசேஷ வாகன புறப்பாடு கோலாகலமாக நடைபெற்றது. மாட வீதிகளில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பெரிய சேஷ வாகன புறப்பாட்டை கண்டு தரிசித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்