திருப்பத்தூரில் பயங்கர சம்பவம் .. சடலமாக கிடந்த மூதாட்டி.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்

x

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே, வீட்டில் தனியே இருந்த மூதாட்டி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வாணியம்பாடி அடுத்த ராஜபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திராபாய். 75 வயது மூதாட்டியான இவர், கணவரை இழந்து தனியே வசித்து வந்துள்ளார். கூலி வேலை செய்து வாழ்ந்து மூதாட்டி, திடீரென மர்மமான முறையில் அடித்து கொல்லப்பட்டு, வீட்டிற்குள் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில், கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்