பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை... தலைமை ஆசிரியர் செய்த அதிர்ச்சி சம்பவம்.. அதிரடி காட்டிய போலீஸ்

x

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், கணினி ஆபரேட்டரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

வாணியம்பாடி அடுத்த நியுடவுன் பகுதியை சேர்ந்த சுப்பிரமணிர், பொன்னேரி பூனைகுட்டை பள்ளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், சுமார் 12 ஆண்டுகளாக தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். பெரிய மோட்டூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தி என்பவர், திருமணமாகி கணவரை இழந்த நிலையில், இதே பள்ளியில், தற்காலிக கணினி ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், தலைமை ஆசிரியர் சுப்பிரமணி, அப்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பெண்ணின் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் சுப்பிரமணியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், அப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், தலைமையாசிரியர் இதுபோன்ற தவறை செய்திருக்க மாட்டார் என்றும், மீண்டும் பள்ளிக்கு வரவேண்டும் என்று கோரி, பள்ளிக்கதவை பூட்டி வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்