காவலரை ஆபாசமாக பேசிய வழக்கறிஞர்.. நீதிமன்ற வளாகத்தில் அதிர்ச்சி

x

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை சேர்ந்த மஞ்சு என்பவருக்கு சொந்தமான காரை, கமலக்கண்ணன் மற்றும் பைரோஸ் கான் ஆகிய இருவர் போலி ஆவணங்கள் மூலம் விற்று மோசடி செய்ததாக தெரிகிறது. இது குறித்தான புகாரில் இருவரையும் போலீசார் கைது செய்திருக்கின்றனர். இருவரையும் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தியபோது, நீதிபதியிடம் தனக்கு உடல் நிலை சரியில்லை எனச் சொல்லுமாறு வழக்கறிஞர் சுரேஷ் என்பவர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனைக்கேட்ட காவலர் குடியரசன் என்பவர் வழக்கறிஞர் சுரேஷை எச்சரித்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த வழக்கறிஞர் காவலரை தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பரவிவருகிறது.


Next Story

மேலும் செய்திகள்