வீட்டிற்குள் சடலமாக கிடந்த பெண்.. "வாய், காது, மூக்குல ரத்தம்".. மகளை பார்த்து கதறிய தாய்

x

வீட்டிற்குள் சடலமாக கிடந்த பெண்.. "வாய், காது, மூக்குல ரத்தம்".. மகளை பார்த்து கதறிய தாய்

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் இளம்பெண் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் திசையன்விளையை சேர்ந்த ரமேஷ், லட்சுமி பிரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில், ரமேஷ் அடிக்கடி குடிபோதையில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. வியாழக்கிழமை காலையில் ரமேஷ் தனது குழந்தையை மாமியார் வீட்டில் விட்டுவிட்டு, மனைவி கோபித்து சென்றுவிட்டதாகவும், அவரை தேடி செல்வதாகவும் கூறியுள்ளார். சந்தேகத்தின் பேரில், மாமியார் விஜயலட்சுமி வீட்டில் சென்று பார்த்த போது, லட்சுமிபிரியா வாய் மற்றும் மூக்கில் ரத்தக் கசிவுடன் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ந்துபோயினர். கணவர் ரமேஷ் கொலை செய்துவிட்டதாக லட்சுமி பிரபாவின் தாயார் புகார் அளித்துள்ள நிலையில், போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்