பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு..! பெண்ணை சரமாரியாக வெட்டி கொன்ற நபர் நெல்லையில் அதிபயங்கர சம்பவம்

x

நெல்லை சி என் கிராமம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களாக வேலை செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் கண்ணன் குடும்பத் தேவைக்காக காளிமுத்து என்பவரிடம் கடன் வாங்கி இருக்கிறார். இந்த நிலையில் வாங்கிய கடனை திரும்பக் கொடுக்காததால் காளிமுத்து கண்ணன் வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டு இருக்கிறார். இதனால் கண்ணன் காளிமுத்து மீது காவல் நிலையத்தில் புகார் அளித்ததால், ஆத்திரமடைந்த காளிமுத்து கண்ணனைச் சரமாரியாக வெட்டி இருக்கிறார். இதில் படுகாயம் அடைந்த கண்ணனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதன் தொடர்ச்சியாக ஆத்திரம் குறையாத காளிமுத்து கண்ணனின் தாய் சாவித்திரியைச் சரமாரியாக வெட்டி இருக்கிறார். இதில் படுகாயம் அடைந்த சாவித்திரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக காளிமுத்து உட்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்