மாநகராட்சியுடன் கிராமங்களை இணைக்க எதிர்ப்பு..! சாலையில் இறங்கி போராடிய மக்கள் | Tirunelveli

x

நெல்லை மாநகராட்சியுடன் 14 கிராமங்களை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, கிராமசபை கூட்டத்தில் ராமையன்பட்டி ஊராட்சி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காந்தி ஜெயந்தியை ஒட்டி ராமையன்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தை நடத்த விடாமல் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சியுடன் கிராமங்களை இணைப்பதால் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் உள்ளிட்டவை பாதிக்கப்படும் என கூறி குற்றச்சாட்டு தெரிவித்தனர். தொடர்ந்து உயர் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக கூட்டம் ரத்து செய்யப்படுவதாக ஊராட்சி மன்ற தலைவர் டேவிட் அறிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்