வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்ததால் பள்ளி மாணவனை அடித்த சக மாணவர்கள்.. "என் கேரக்டர் தெரியுமா?.."

x

வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்ததால் பள்ளி மாணவனை அடித்த சக மாணவர்கள்.. "என் கேரக்டர் தெரியுமா?.."

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் தனியார் பள்ளி மாணவர் மீது சரமாரி தாக்குதல் நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. வள்ளியூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவர், தமது நண்பருடன் இருக்கும் புகைப்படத்தை வாட்ஸ்அப் ஸ்டேடஸ் வைத்து, அதன் கீழே மிரட்டல் தொனியில் வாசகம் ஒன்றை பதிவு செய்ததாக கூறப்படுகிறது. அதே பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அந்த ஸ்டேடஸை நீக்குமாறு கோரியதாகவும், அந்த மாணவர் மறுத்ததாகவும் தெரிகிறது. இதனால், கடந்த 10-ம் தேதி அந்த மாணவர் வள்ளியூர் பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, அதே பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் உள்பட மேலும் சிலர் சரமாரியாக தாக்கியுள்ளனர். இது தொடர்பாக இரண்டு மாணவர்கள் பள்ளியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நாங்குநேரி சிறார் நீதி குழுமத்தில் சேர்த்ததையடுத்து, நீதிபதி அவர்களை எச்சரித்து அனுப்பினார். இதனிடையே, மாணவர் தாக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்