"அடுத்த போஸ்டர்ல போட்டோ தான்".. நெல்லை அருகே போஸ்டர் அடித்து மிரட்டல்

x

நெல்லை மாவட்டம் பொன்னாக்குடி கிராமத்தில், திருமண வரன்களை தடுக்கும் நபர்களை கண்டித்து, இளைஞர்கள் சிலர் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

பொன்னாக்குடி கிராமத்தில், பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் திருமணம் ஆகாமல் உள்ளனர். இவர்களுக்கு வரும் வரன்களை சிலர், அவதூறு பேசி தடுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவதூறு பரப்புபவர்களை கண்டித்தும், தங்களது மனவேதனையை கொட்டியும், இளைஞர்கள் சிலர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அவதூறு பரப்பும் நபர்களின் புகைப்படம், அடுத்த போஸ்டரில் சேர்க்கப்படும் என்றும், அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்