ஒத்தப்பனை சுடலை மாடசுவாமி கோவில் கொடை விழா.. படையல் போட்டு தரிசனம் செய்த பக்தர்கள்

x

நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வடக்கு விஜயநாராயணம் ஒத்தப்பனை சுடலை மாடசுவாமி கோவில் கொடை விழா கணபதி ஹோமம் மற்றும் கும்ப பூஜையுடன் தொடங்கியது. விழாவில் சிகர நிகழ்வான சாமக்கொடையில், லட்சக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன், பொங்கலிட்டு சுவாமியை வணங்கினர். மேலும் சுவாமி சன்னதியில் ஆடு, கோழி, பன்றி ஆகியவற்றை பலியிட்டு முட்டையுடன் முருங்கக்காய் சேர்த்து, நெய் பந்தம் வைத்து படையல் போட்டு சாமக்கொடை விழா நடைபெற்றது. பிறகு சுடலை மாடசுவாமி மயான வேட்டைக்கு செல்லும் காட்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்