``ஜூன், ஜூலையில்... அனுப்பிய நெய்யில்..'' ஏ.ஆர்.டெய்ரி ஊழியர்கள் பரபரப்பு பேட்டி

x

திருப்பதி கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவை தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், திண்டுக்கல்லில் இயங்கி வரும் ஏ.ஆர். டெய்ரி ஃபுட் என்ற நிறுவனம் சார்பாக, கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில், திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய் வழங்கப்பட்டது. அவ்வாறு வழங்கப்பட்ட நெய் தரமானதாக இருந்ததாகவும், எந்தவொரு குறையும் இல்லையெனவும் அந்நிறுவனத்தின் தரக்கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, தேவஸ்தான நிர்வாகம் தங்கள் நெய்யை ஆய்வு செய்ததில் குறைபாடு இல்லை என சான்று வழங்கியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்