திருச்சியில் 19 கிலோ திமிங்கல உமிழ்நீர்... யாருக்கும் கிடைக்காத அரிய பொருள்.. அதிர்ந்த அதிகாரிகள்

x

திருச்சியில் திமிங்கலத்தின் உமிழ்நீரை விற்க முயன்ற ஐவர் போலீசிடம் பிடிபட்டனர்... மதுரை வனக்காவல் நிலைய படையினர் திருச்சி மிளகு பாறையில் உள்ள தனியார் விடுதியில் அதிரடி சோதனை நடத்தினர்... அப்போது மதுரை கல்லணை கிராமத்தைச் சேர்ந்த கார்த்தில், வடிவேலன், கோவில்பட்டியைச் சேர்ந்த சண்முகப்பிரியன், தென்காசி பாலூர் சத்திரத்தைச் சேர்ந்த குமார், கடையநல்லூர் குணராம நல்லூரைச் சேர்ந்த ஜெயபால் ஆகியோரிடம் இருந்து 19 கிலோ 200 கிராம் எடையுள்ள திமிங்கலத்தின் உமிழ்நீர் கண்டுபிடிக்கப்பட்டது... தடை செய்யப்பட்ட வணிகம் என்று தெரிந்தும் கடந்த 2 ஆண்டுகளாக திமிங்கல உமிழ்நீரை விற்பனை செய்து வந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர்கள் 5 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்