திருச்செந்தூரில் அதிர்ச்சி சம்பவம்... கதறி அழும் பெண்ணின் வீடியோ

x

திருச்செந்தூரில் அதிர்ச்சி சம்பவம்... கதறி அழும் பெண்ணின் வீடியோ

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்த சுடலைமணி சிவசெல்வி தம்பதி. இவர்களின் மகன் முத்து சுகலேஷ் திருநெல்வேலியில் உள்ள ஹோட்டலில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்து இருக்கிறார். கடந்த வியாழக்கிழமை வேலை முடித்து வீடு திரும்பும் வழியில் அவரை வழிமறித்த நான்கு பேர் கொண்ட கும்பல், கஞ்சா போதையில் சரமாரியாகத் தாக்கி தங்க செயின், பணம், செல்போனை கொள்ளையடித்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த முத்து சுகலேஷின் கண் பார்வை பாதிக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் முத்து சுகலேஷின் சகோதரி புவனேஸ்வரி கண்ணீருடன் வெளியிட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்