திருச்செந்தூரில் கோரம்.. சிறுவன் உட்பட 3 பேர் அகால மரணம்.. உயிருக்கு போராடும் 6 பேர்

x
  • தூத்துக்குடி மாவட்டம் கல்லாமொழி அருகே, முன்னால் சென்ற வாகனங்களை முந்திச் சென்ற லோடு ஆட்டோ ஒன்று, எதிரே வந்த மினி லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் லோடு ஆட்டோவில் சென்ற ஒரு சிறுவன் உட்பட 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். படுகாயமடைந்த 6 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா கொடியேற்றத்திற்கு சென்று திரும்பிய போது, இந்த விபத்து நடைபெற்ற நிலையில், அதில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்