குழந்தை கழுத்தில் கத்தி..தாயை தொட்ட காம கொடூரர்கள் - அடுத்து நடந்த விபரீதம்

x

திண்டிவனத்தில் குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற புகாரில் இருவரை போலீசார் கைது செய்தனர்.திண்டிவனம் பகுதியில் வசிக்கும் பெண்ணிற்கும், ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் பகுதியைச் சேர்ந்த விஜய் என்பவருக்கும் கொடுக்கல், வாங்கல் பிரச்சனை இருந்துள்ளது. இதனால் அடிக்கடி அந்த பெண்ணிடம் பிரச்சினையில் ஈடுபட்டு வந்த விஜய், ஞாயிற்றுக்கிழமை இரவு சுகன்யா வீட்டில் தனியாக இருந்த போது, நண்பர் முஹம்மது ரஃபிக் உடன் அத்துமீறி நுழைந்து அவரையும், குழந்தைகளையும் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக புகார் எழுந்துள்ளது. பின்னர் பெண்ணின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்ததால், இருவரும் தப்பியுள்ளனர். சம்பந்தப்பட்ட பெண் அளித்த புகாரில் விஜய் மற்றும் முகமது ரபிக் போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்