தோட்டத்திற்குள் மர்மமாய் சிதைந்த உடல் "ஆள வச்சி தீர்த்து கட்டிட்டான்.." - கதறும் உறவினர்கள்

x

தூத்துக்குடி அருகே தோட்டத் தொழிலாளி ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், உடலை வாங்க மறுப்பு தெரிவித்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள கோட்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். நட்டாத்தி பகுதியில் உள்ள அருண் என்பவருக்கு சொந்தமான 20 ஏக்கர் தோட்டத்தில் சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை பார்த்து வந்திருக்கிறார். இந்நிலையில், தோட்டத்தின் மேலாளராக பணி புரிந்து வந்த பார்த்த சாரதி தோட்டத்தில் உள்ள ஆடு, மாடுகளை திருடி விற்று வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து உரிமையாளரிடம் தெரிவிக்க இருப்பதாக சந்திரசேகர் கூறியதாகவும், இதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், தலை மற்றும் முகம் உள்ளிட்ட பகுதிகளில் வெட்டுக் காயங்களுடன் சந்திரசேகர் மர்மமான முறையில் தோட்டத்திற்குள் சடலமாக கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் பின்னணி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், தோட்ட மேலாளர் பார்த்த சாரதி தான் சந்திரசேகரை கொன்றதாகவும், அவரை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் எனவும் கூறி சந்திரசேகரின் உறவினர்கள் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்