ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு; போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு!

x

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரில் சுமார் 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில், நாசரேத் செல்லும் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் சார்பில் 15 நாட்களுக்கு முன்பு வியாபாரிகளுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், வருவாய்த் துறையினர், பேரூராட்சி நிர்வாகத்தினர் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீஸ் பாதுகாப்போடு ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆழ்வார்திருநகரியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், சில வியாபாரிகள் தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.


Next Story

மேலும் செய்திகள்