குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிக்கு பதவி உயர்வா?.. கலெக்டர் மறுப்பு

x

தூத்துக்குடி ஸ்டெர்லைட் வன்முறையில் குற்றம்சாட்டப்பட்ட வருவாய்த்துறை அலுவலருக்கு பதவி உயர்வு அளிக்கப்படவில்லை என, மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய வருவாய்த்துறை அலுவலராக குற்றம் சாட்டப்பட்ட மு.கண்ணனுக்கு பதவி உயர்வு அளிக்கப்படவில்லை என்றும், திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் துணை வட்டாட்சியராகப் பணிபுரிந்த து.கண்ணனுக்கு வட்டாட்சியராகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். பெயர்க்குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியானதாக​வும்​ தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்