திருவாரூரை உலுக்கிய கொலை வழக்கு- அடுத்தடுத்து சிக்கும் பெண் போலீஸ்கள் - சாட்டையை சுழற்றிய SP

x

திருவாரூர் அருகே வாகன ஒப்பந்ததாரர் கொலை வழக்கில் மேலும் ஒரு பெண் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் சோழங்கநல்லூரை சேர்ந்த வாகன ஒப்பந்ததாரரான பாபு, தொழில் போட்டி காரணமாக கடந்த 9ம் தேதி கொலை செய்யப்பட்டார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பாகவே தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், உரிய பாதுகாப்பு வழங்குமாறும், வைப்பூர் காவல் நிலையம், முதல்வரின் தனிப்பிரிவு, திருச்சி ஐஜி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோருக்கு பாபு மனு அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த மனு மீது நடவடிக்கை எடுக்காததால், திருவாரூர் தாலுகா காவல் ஆய்வாளர் அகிலாண்டேஸ்வரி 3 நாட்களுக்கு முன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் திருவாரூர் டி.எஸ்.பி. முகாம் அலுவலக தலைமை காவலர் புவனேஷ்வரியை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்