"ஆம்பளனா..! அவன வெட்டி போட்டுட்டா.." திருமணத்திற்கு தயாரான காதல் ஜோடி... வஞ்சம் தீர்த்த சாதி வெறி

x

திருவாரூரில், காதல் திருமணம் செய்ய இருந்த இளம் ஜோடிக்கு பெண் வீட்டாரால் நள்ளிரவில் நேர்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பார்க்கலாம் விரிவாக...

நாகப்பட்டினம் மாவட்டம் ராராந்திமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ்... 24 வயதான இவர் சென்னையில் லாரி டிரைவராக பணியாற்றி வரும் நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த சினேகா என்பவரை காதலித்து வந்துள்ளார்...

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சினேகா செவிலியராக பணி புரிந்து வந்த நிலையில், இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது...

சுமார் 6 வருடங்களாக இருவரும் காதலித்து வர, திடீரென ஆகாஷின் வீட்டில் திருமண பேச்சு எழுந்துள்ளது. உடனே, தான் ஒரு பெண்ணை காதலித்து வருவதை ஆகாஷ் வீட்டில் சொல்ல, அவரே எதிர்பார்க்காத வகையில் காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர்...

இதனால் குஷியில் இருந்த ஆகாஷ், காதலியின் ஊர் திருவிழாவில் யாருக்கும் தெரியாமல் அவரை பார்க்கச் சென்ற நிலையில், ஒரு கட்டத்தில் காதலியின் வீட்டிற்குள்ளே சென்று காதலியை சந்திக்க... பெண்ணின் உறவினர்களிடம் சிக்கி இருக்கிறார்...

இருவரையும் பிடித்து சரமாரியாக தாக்கிய பெண்ணின் உறவினர்கள்... ஊர் பஞ்சாயத்தை கூட்டி இனி இவள் என் மகளே கிடையாது என சினிமா பாணியில் பெண்ணுடனான உறவை முறித்துக் கொண்டிருக்கின்றனர்...

இந்நிலையில், தன் வீட்டார் சம்மதத்துடன் காதலியை கரம் பிடிக்க நினைத்த ஆகாஷ், திருமணத்திற்காக சென்னையில் உள்ள நகைக்கடை ஒன்றில் சீட்டு கட்டி நகை சேர்த்து வந்த நிலையில், சம்பவத்தன்று தன் காதலியுடன் சேர்ந்து நகை எடுக்க கிளம்பியபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது...

சென்னை சென்று விட்டு... இரவு 11 மணியளவில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ள மகிழஞ்சேரி பேருந்து நிலையம் வந்திறங்கிய இருவரையும்... பென்ணின் சகோதரர் திலீப் ராஜ் மற்றும் அக்கா கணவர் திலீப் உட்பட 3 பேர்... அரிவாளால் சரமாரியாக தாக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது...

தொடர்ந்து, சினேகாவை வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்ட அவரின் சகோதரர்... இருவரையும் வெட்டாமல் விடமாட்டேன் என கூறி மிரட்டல் விடுக்கும் ஆடியோவும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது...

விவகாரம் சாதாரணமாக தெரிந்தாலும்... சாதியை காரணம் காட்டி இதுவரை அரங்கேற்றப்பட்ட கொலைகள் அனைத்தும் இப்படிதான் முளை விட்டிருக்கின்றனர்...

காதலர்கள் இருவரும் தங்களின் உயிருக்கு பாதுகாப்பு கோரி போலீசில் புகாரளித்திருக்கும் நிலையில், நன்னிலம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்