"தண்ணீரை அதிக அளவில் கொடுத்தால் பயிரை காப்பாற்ற முடியும்" - வேதனையில் விவசாயிகள்

x

திருத்துறைப்பூண்டி அருகே சம்பா சாகுபடிக்கு, போதிய தண்ணீர் இல்லாததால் ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் சம்பா பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். திருத்துறைப்பூண்டி சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆறுகள் மற்றும் பாசன வாய்க்கால்களில் போதிய அளவு தண்ணீர் வந்து சேராததால், வளர்ந்து வரும் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். முறை வைக்காமல் அதிக அளவு ஆற்றில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்