பெண்கள் சண்டையில் பறிபோன ஆணின் உயிர்... தட்டிக்கேட்க சென்ற இடத்தில் அரங்கேறிய பயங்கரம்

x

திருவாரூர் மாவட்டத்தில் அரங்கேறி இருக்கும் கொலைச் சம்பவம் ஒன்றில், 3 பெண்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். பின்னணி காரணம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், பார்க்கலாம் விரிவாக...

பெண்களுக்கிடையேயான சண்டையில் ஒரு ஆணின் உயிர் பறிபோயிருக்கிறது ...

மனைவி குறித்து தொடர்ந்து தவறாக பேசி வந்த பெண்ணை, தட்டிக்கேட்க சென்ற கணவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்....

திருவாரூர் மாவட்டம் தக்கலூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் முரளி....

லாரி ஓட்டுநரான இவருக்கு ஐஸ்வர்யா என்பவருடன் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ள நிலையில், தக்கலூர் நடுத்தெருவை சேர்ந்த தேவேந்திரன் என்பவரின் மனைவி பத்மா... முரளியின் மனைவி குறித்து தொடர்ந்து அவதூறு பரப்பி வந்ததாக கூறப்படுகிறது...

இதனால் இரு தரப்புக்குமிடையே பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்த நிலையில், இருதரப்பும் அவச்சொற்களால் ஒருவரையொருவர் திட்டி அக்கம்பக்கத்தினர் முகம் சுளிக்கும் அளவுக்கு பொது வெளியில் மோதி வந்திருக்கின்றனர்...

மோதல்கள் முடிந்த பாடில்லாமல்... பல வழிகளில் தொடர்ந்து வந்த நிலையில், ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ஐஸ்வர்யாவின் கணவர் முரளி, தன் மனைவி குறித்து அவதூறு பரப்பிய பத்மாவை அவரது வீட்டிற்கு சென்றே தட்டி கேட்டிருக்கிறார்....

சம்பவ இடத்தில் தேவந்திரன் - பத்மா தம்பதியுடன் ஒற்றை ஆளாக நின்று முரளி வாக்குவாதம் செய்ய... நைசாக வீட்டுக்குள் சென்று செல்போன் மூலம் தனது உறவினர்களை பத்மா அழைத்த நிலையில், டாட்டா ஏஸ் வாகனத்தில் வந்து இறங்கியிருக்கிறது கும்பல்...

அவ்வளவுதான் பண்டங்களை மொத்த ஈக்கள் போல், முரளியை தன் கணவர் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து பத்மா கண்முடித்தனமாக தாக்கிய நிலையில், படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முரளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது...

சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், பத்மா மற்றும் அவரின் கணவர் உட்பட, 3 பெண்களுடன் சேர்ந்து 8 பேரை கைது செய்திருக்கும் நிலையில், இந்த கொலையும், இதன் பின்னணி காரணமும் திருவாரூர் மாவட்டம் தக்கலூரை பரபரப்புக்குள்ளாக்கி இருக்கிறது...


Next Story

மேலும் செய்திகள்