நீயா நானா.. கிரிவலம் முடிந்த மறுநொடி - டீக்கடைக்குள் புகுந்த ஆட்டோ- திருவண்ணாமலையில் அதிர்ச்சி

x

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கிரிவலம் சென்றனர். இந்த நிலையில, சன்னதி தெரு-தாளகிரி ஐயர் தெரு சந்திப்பில் கிரிவலம் மேற்கொண்டு திரும்பும் பக்தர்களை பேருந்து நிலையத்துக்கு அழைத்துச் செல்ல ஆட்டோக்கள் வரிசையாக நின்ற நிலையில் பயணிகளை ஆட்டோவில் ஏற்றுவதற்காக முண்டியடித்தன. அப்போது மதுபோதையில் இருந்த டிரைவர் ஒருவர் ஆட்டோவை வேகமாக இயக்க, அது அருகில் இருந்த டீக்கடைக்குள் புகுந்தது. நல்வாய்ப்பாக யாருக்கும் காயமில்லை. கடையின் உள்ளே சென்ற ஆட்டோவை வெகு நேர போராட்டத்திற்கு பின் மீட்டனர். இதை தொடர்ந்து அங்கு வந்த போலீசார், ஆட்டோவை பறிமுதல் செய்து, அதன் ஓட்டுநரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். திருவண்ணாமலை, கோயில் பகுதியில் ஆட்டோ ஓட்டுநரின் தொல்லைகள் அதிகரித்து விட்டதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்