தி.மலையில் நேரடியாக களத்தில் இறங்கிய கலெக்டர்.. பறந்த அதிரடி எச்சரிக்கை | Tiruvannamalai | Thanthitv

x

திருவண்ணாமலை கிரிவல பாதையில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அதிரவு ஆய்வு மேற்கொண்டார்

அங்கிருந்த நடைபாதை வியாபாரிகளை மாற்று இடத்தில் கடைகள் அமைத்துக் கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தினார். மேலும், தடையை மீறி கடைகள் அமைத்தால் அதிகப்படியான அபராதம் விதிக்கப்படுமென எச்சரிக்கை விடுத்தார். இதனிடையே, அங்கு யாசகம் பெற்று வரும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் குழந்தைகளை காப்பகத்திற்கு அனுப்பும் நடவடிக்கையும் எடுக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்