நடுரோட்டில் போலீசார் கண்முன்னே இளைஞர் செய்த காரியம் - பதறிய மக்கள்.. ஷாக் வீடியோ

x

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில், மது போதையில் கத்தியுடன் மகளிர் காவல் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு நிலவியது. செங்கம் தோக்கவாடியை சேர்ந்த வாசு, விநாயகர் சிலை வாங்கச் சென்றபோது, சில இளைஞர்களுடன் தகராறு ஏற்பட்டது. அப்போது அருகில் உள்ள மகளிர் காவல் நிலையத்திற்கு சென்ற இளைஞர்களை வாசு தாக்க முயன்றதால் மகளிர் காவல்துறையினர் தடுக்க முயன்றனர். இதையடுத்து வாசு தாக்க முற்பட்டதால் காவல்நிலைய கதவு பூட்டப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த துணை ஆய்வாளர் சரவணன், தலைமை காவலர் சௌந்தரை வாசு கத்தியால் குத்த முயன்றதில் இருவரும் காயமின்றி தப்பினர். இதையடுத்து வாசுவை பிடித்து போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்