கடனை கட்டாததால் பெண்ணை ஆபாசமாக பேசிய நபர்.. முகத்தை குத்தி கிழித்த உறவினர் - அதிர்ச்சி சிசிடிவி

x

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் உள்ள பெல் ஸ்டார் என்ற நிதி நிறுவனத்தில் 50 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றுள்ள லட்சுமி என்பவர் இந்த மாதம் கட்ட வேண்டிய தவணை தொகை கட்டவில்லை. இதனால் பெல் ஸ்டார்

நிதி நிறுவன ஊழியர் ஒருவர் லட்சுமியை நேரில் சென்று ஆபாசமாகவும் அசிங்கமாகவும் திட்டியதாக கூறப்படுகின்றது. லட்சுமியின் உறவினரான சதீஷ் என்பவர் இதனால் ஆத்திரமடைந்து, பெல் ஸ்டார் என்ற நிதி நிறுவனத்திற்கு சென்று வாக்குவாதம் செய்தார். நிதி நிறுவன ஊழியர் அரிகரன்

என்பவரை சரிமாரியாக தாக்கியுள்ளார். இதில் நிலைகுலைந்து போன அரிகரன் சம்பவம் குறித்து ஆரணி டவுன் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் ஆரணி டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் குறித்த சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்