கணவனை சுத்தியலால் அடித்து கொன்ற மனைவி

x

மதுபோதையில் தகராறு செய்த கணவரை, மனைவி சுத்தியலால் அடித்து கொன்ற சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த பம்மதுகுளத்தை சேர்ந்தவர் கருணாகரன். ஆட்டோ ஓட்டுநரான இவர், சரஸ்வதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், 3 பிள்ளைகள் உள்ளனர். இதனிடையே, தினமும் மதுபோதையில் வீட்டிற்கு வந்து மனைவியிடம் கருணாகரன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த சரஸ்வதி, கடந்த 27 ஆம் தேதி நடைபெற்ற தகராறில், கருணாகரனை சுத்தியலால் அடித்திருக்கிறார். இதில், பலத்த காயமடைந்த கருணாகரன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 9 நாள் தொடர் சிகிச்சைக்கு பின்னர் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். இந்த சம்பவம் குறித்து, கருணாகரனின் மனைவி சரஸ்வதியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்