பாலியல் புகாரில் 2 ஆசிரியர்கள் கைதான விவகாரம்... "அவர்கள் பாலியல் தொந்தரவு தரவில்லை"

x

திருவள்ளூர் அடுத்த செவ்வாய்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பாலியல் புகாரில் 2 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், ஆசிரியர்கள் அவ்வாறு நடந்து கொள்ளவே இல்லை என மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது... பள்ளியில் பயிலும் மாணவிகள் 300க்கும் மேற்பட்டோர் ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் அப்படிப்பட்ட பாலியல் தொந்தரவுகளை ஆசிரியர் செய்யவில்லை எனவும் கூறி ஆவடி திருவள்ளூர் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்... இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்