கிளாசுக்குள் கலெக்டர் திடீர் என்ட்ரி..டீச்சர்களை கோர்த்துவிட்ட மாணவர்கள்..

x

கிளாசுக்குள் கலெக்டர் திடீர் என்ட்ரி..டீச்சர்களை கோர்த்துவிட்ட மாணவர்கள்..ஹெட்மாஸ்டருக்கும் சேர்த்து வாத்தி ரெய்டு - மாணவர்கள் கண்முன்னே அலறவிட்ட காட்சி

திருவள்ளூர் திருத்தணி அரசுப் பள்ளியில் திடீர் ஆய்வு நடத்திய ஆட்சியர் பிரபு சங்கர் மாணவர்களுக்கு புரியாமல் பாடம் நடத்துவதாகக் கூறி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியரை கடிந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... ராதாகிருஷ்ணன் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆட்சியர் பிரபு சங்கர் ஆய்வு செய்தார்... வகுப்பறைக்குள் அதிரடியாக நுழைந்து மாணவர்களிடம் ஆசிரியர் நடத்தும் பாடம் குறித்து ஆட்சியர் கேள்வி கேட்கத் துவங்கினார்... மாணவர்கள் திருதிருவென விழிக்கவே... அவர்களுக்குப் புரியாமல் பாடம் எடுக்கக் கூடாது என மாணவர்கள் முன்பே ஆசிரியருக்குப் பாடம் எடுத்தார் ஆட்சியர்... மேலும் ஒழுங்காக கண்காணிக்க வேண்டும் என தலைமை ஆசிரியருக்கும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கும் கடும் எச்சரிக்கை விடுத்தார்...


Next Story

மேலும் செய்திகள்