`ஆன்லைன்' ஆட்டோவில் புக் செய்து செல்பவர்களே உஷார்.. அதிர்ச்சி செய்தியை கண்முன் காட்டிய சிசிடிவி

x
  • திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை சேர்ந்தவர் செந்தாமரை. தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வரும் இவர், ஓலாவில் ஆட்டோ புக் செய்து உறவினர் வீட்டிற்கு சென்றிருக்கிறார். சவாரிக்கு வந்த பெண் ஓட்டுநரிடம் பேச்சுவாக்கில் தன் குறித்தான தகவல்களை செந்தாமரை தெரிவித்ததாக தெரிகிறது. இந்நிலையில், செந்தாமரையை உறவினர் வீட்டில் இறக்கி விட்ட அப்பெண் ஓட்டுநர், பின் திரும்பி வந்து செந்தாமாரை வீட்டிற்குள் புகுந்து ஒரு சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருக்கிறார். இது குறித்து ஆவடி போலீசில் புகாரளிக்கப்பட்டிருக்கும் நிலையில், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வரும் போலீசார், பெண் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்