நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி.. தந்தை, 7 வயது மகனை காப்பாற்ற போராடிய போலீஸ்

x

திருத்தணி அருகே மது போதையில், 7 வயது மகனுடன் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த நபரை, சுமார் ஆறு மணி நேர போராட்டத்திற்கு பின் போலீசார் பாதுகாப்பாக மீட்டனர். திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை பகுதியை சேர்ந்த முருகன் என்பவர், குடும்ப பிரச்சினை காரணமாக இந்தச் செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. முதலில் தீயணைப்புத் துறை உதவியோடு, சிறுவனை பாதுகாப்பாக மீட்ட போலீசார், பின்னர் முருகனை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இந்த மீட்புப் போராட்டம், மாலை தொடங்கி நள்ளிரவு வரை நீடித்தது.


Next Story

மேலும் செய்திகள்