5 திருமணம் முடித்த பெண்.. தில்லாலங்கடி செய்த கல்யாண ராணி.. இறுதியில் வெளியான பகீர் தகவல் | Thanthitv

x

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த 29 வயது இளைஞர் ஒருவருக்கு, அவரது பெற்றோர் திருமண வரன் பார்த்து வந்துள்ளனர். இதனிடையே, ஆன்லைன் ஆப் மூலம் கொடுமுடியை சேர்ந்த சத்யா என்ற பெண்ணுடன் இளைஞருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இப்பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில், தனது தயாருக்கு உடல் நிலைய சரியில்லை எனவும், அதனால் நாம் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளலாம் எனவும் சத்யா கூறியதாக தெரிகிறது. இதனிடையே, வீட்டாருக்கு தெரியாமல் இருவரும் திருமணம் செய்திருக்கின்றனர். மணக்கோலத்திலும், புது மணப்பெண்ணுடன் வீட்டிற்கு வந்த இளைஞரை கண்டு அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்த நிலையில், இருவரையும் மணமாற ஏற்று கொண்டுள்ளனர். தொடர்ந்து சத்யாவுக்கு இளைஞரின் வீட்டார் நகைகள் அணிந்து அழகு பார்த்த நிலையில், அவரின் வீட்டாருடன் பேசி திருமணம் வரவேற்பு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்திருக்கின்றனர். அப்போது தான் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இளைஞரை திருமணம் செய்து கொண்டது போல் ஆன்லைன் ஆப் மூலம் பழகி பலரை சத்யா திருமணம் செய்திருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. கரூரை சேர்ந்த காவல் ஆய்வாளர் ஒருவர் தொடங்கு மாட்டு வியாபாரி மகன் என நால்வரை சத்யா திருமணம் செய்து லட்சக் கணக்கில் பண மோசடி செய்திருப்பதும், இதில் அவருக்கு பெண் குழந்தை ஒன்று இருப்பதும் தெரியவந்திருக்கிறது. இந்நிலையில், சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்திருக்கும் போலீசார், சத்யாவையும் அவருக்கு தரகராக செயல்பட்டு வந்த தமிழ்செல்வி என்பவரையும் வலை வீசி தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்