ரவுண்ட்ஸ் வந்த போலீஸ்- கட்டு கட்டாக சிக்கிய பணம் - அடுத்த நொடி அவர் செய்த செயல்

x

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தாசர்பட்டியில் உள்ள ஏடிஎம் மையத்தில் தவற விடப்பட்ட 3 லட்ச ரூபாய் பணம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது... ஏடிஎம்மில் பணம் நிரப்பும்போது ஊழியர்கள் 3 லட்ச ரூபாய் பணத்தை தவறுதலாக ஏடிஎம் மிஷினின் பின்புறம் வைத்திருந்ததை மறந்து விட்டனர்... 23ம் தேதி நள்ளிரவு ஒன்றரை மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர் அப்துல்லா... ஏடிஎம் மையத்தில் சென்று ஆய்வு மேற்கொண்ட போது பணம் இருப்பதைக் கண்டறிந்தார்... தொடர்ந்து 3 லட்ச ரூபாய் பணம் காவல் நிலையத்தில் கொண்டு செல்லப்பட்டு பிறகு வங்கி மேலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்