நண்பர்களுடன் கிணற்றில் குளிக்க சென்ற சிறுவன்.. நீச்சல் தெரியாமல் பரிதாபமாய் உயிரிழந்த சோகம்

x

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நண்பர்களுடன் கிணற்றில் குளிக்க சென்ற 10ம் வகுப்பு பள்ளி மாணவன் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரின் மகன் தமிழ்ச்செல்வன், தனது நண்பர்கள் ஏழு பேருடன் வேப்பமரத்து சாலை பகுதியில் உள்ள கிணற்றுக்கு குளிக்கச் சென்றுள்ளார். அப்போது நீச்சல் தெரியாத தமிழ்ச்செல்வன் ஆர்வக்கோளாறில் கிணற்றில் குதித்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்