திருமா கண்முன்னே மாநாட்டில் பெண் இன்ஸ்பெக்டர், பெண் போலீசுக்கு நேர்ந்த அதிர்ச்சி

x

உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற விசிக மது ஒழிப்பு மாநாட்டில், திருமாவளவன் பேசத் தொடங்கியவுடன், அவரை பார்க்க தொண்டர்கள் ஆர்வம் காட்டினார். இதனால் மேடைக்கு முன் வைக்கப்பட்ட தடுப்பு கம்பிகளைத் தாண்டி உள்ளே நுழைய முயன்ற அவர்களை போலீசார் தடுக்க முற்பட்டனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் பெண் போலீசார் ஒருவர் கீழே தள்ளி விடப்பட்டு காயமடைந்தார். அவரை சக போலீசார் தூக்கி விட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்