போட்டி போட்டு ஒருவர் உயிரை பறித்த இளைஞர்கள் - திருச்செந்தூரில் அதிர்ச்சி

x

போட்டி போட்டு ஒருவர் உயிரை பறித்த இளைஞர்கள் - திருச்செந்தூரில் அதிர்ச்சி

காயல் பட்டிணத்திலிரூந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் நேற்று இரவு இளைஞர்கள் சிலர் கார் ரேஸில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஓடக்கரையைச் சேர்ந்த சுரேஷ் என்ற கட்டட கூலித் தொழிலாளி ஊர் திரும்பிக் கொண்டிருந்த நிலையில் மகளிர் கல்லூரி அருகே வந்த போது எதிரே அதிவேகமாக போட்டி போட்டுக் கொண்டு வந்த ஒரு கார் சுரேஷ் மீது பயங்கரமாக மோதியது... இதில் சுரேஷ் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.. கார் ரேஸில் ஈடுபட்டு விபத்தை ஏற்படுத்திய பரமன்குறிச்சியை சேர்ந்த ஜொகு, உடன்குடியை வினோத் சிவா, பெரியாதாழை மற்றும் உடன்குடியை பெசிகான், ரசிகன், பால சதீஷ், இசக்கிமுத்து, மற்றும் சாம்சன் உள்ளிட்ட 7 பேரை பொதுமக்கள் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்