திருச்செந்தூர் முருகர் கோவிலில் 2000+ கொலு பொம்மைகள்.. கண் சிமிட்டாமல் பார்க்கும் பக்தர்கள்

x

நவராத்திரியை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அலங்கரிக்கப்பட்டுள்ள 2000-க்கும் மேற்பட்ட கொலுபொம்மைகள் பக்தர்களை கவர்ந்துள்ளன. இரண்டாம் பிரகாரத்தில் 108 மகாலிங்கம் சன்னதிகள் முன்பு வைக்கப்பட்டுள்ள கொலுவில் முருகன் வீடு, செட்டியார் பலசரக்கு கடை, மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம் உட்பட 2000க்கும் அதிகமான கொலு பொம்மைகள் இடம்பெற்றுள்ளன. இதனை ஏராளமான பக்தர்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்